உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆன்லைன் பதிவு கட்டமைப்பு இல்லை ;மேட்டூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் பதிவு கட்டமைப்பு இல்லை ;மேட்டூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

மேட்டூர்: நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்கு-களை முதல்கட்டமாக கணினியில் பதிவு செய்த பின் விசாரிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மேட்டூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், 3 கணினி, ஒரு ஸ்கேனர் உள்ளன. அதை இயக்க ஒரே அலுவலர் உள்ளார். ஆனால் ஒரு நாளில், 2,000 முதல், 3,000 பக்கங்களை பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. சில நேரங்களில் ஆன்-லைனும் வேலை செய்வதில்லை.இதனால் பல மணி நேர பணி பாதிக்கப்படுவதா-கவும், முறையான கட்டமைப்பு வசதிகளை ஏற்ப-டுத்திய பின், கணினியில் பதிவு செய்யவும் கோரி, கடந்த, 1 முதல், வக்கீல்கள், நீதிமன்ற பணி புறக்கணிப்புபோராட்டத்தில் ஈடுபட்டுள்-ளனர்.இந்நிலையில் நேற்று காலை மேட்டூர் அணை வக்கீல் சங்கத்தலைவர் செந்தில்குமார் தலை-மையில் ஏராளமான வக்கீல்கள், நீதிமன்ற வளாகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். செயலர் மனோகரன், பொருளாளர் விஜயராகவன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ