| ADDED : டிச 21, 2025 07:13 AM
சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று முன்தினம், திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. நேற்று முதல், 'பகல் பத்து' உற்சவம் நடந்து வருகிறது. வரும், 30 அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்க-வாசல் திறக்கப்படவுள்ளது. அன்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவர். அதனால் சிறப்பு தரிசனத்துக்கு, https://tnhrce.gov.inஎன்ற இணையதளத்தில் ஒருவருக்கு, 25 ரூபாய் கட்-டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என, கோவில் நிர்-வாகம் அறிவித்தது.இந்நிலையில் கோவிலில் ஆன்லைன் முன்பதி-வுக்கு தனி கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. அங்கு நேரடியாக முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்-பதிவு செய்தவர்கள், குண்டு போடும் தெரு வழியே உள்ள வரிசையில் வர வேண்டும். பொது தரிசன பக்தர்கள், பழைய புத்தக கடைவீதி வழியே கோவிலுக்கு வரும்படி தடுப்புகள் கட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.