உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பணம் வாங்கியவர் மீது தாக்கு

பணம் வாங்கியவர் மீது தாக்கு

காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி மேலக் குடியிருப்பைச் சேர்ந்தவர் அருள்சாமி 41. இவர் இலுப்பக்குடி கலைமணி நகரைச் சேர்ந்த சாந்தகுமார் என்பவரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.1 லட்சம் பெற்றுள்ளார். பணத்தை கொடுக்கவில்லை என்று கூறி சாந்தகுமார், ராஜா, செந்தில், திருனா, ஆனந்த், பிரபு, பழனி ஆகியோர் அருள்சாமியை பைக்கில் அழைத்துச் சென்று அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயமடைந்த அருள்சாமியை அவரது மனைவி சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அருள்சாமி புகாரின் பேரில் சாந்தகுமார் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை