| ADDED : ஆக 05, 2024 07:06 AM
தேவகோட்டை : தேவகோட்டை அருகே புளியால் அரசு மேல்நிலை பள்ளியில், சதுரங்க கழகம் சார்பில் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டியை நடத்தியது.இப்போட்டியில் மாவட்ட அளவில் இருந்து 200 மாணவர்கள் பங்கேற்றனர். வயது அடிப்படையில் 3 பிரிவாக போட்டிகள் நடந்தது. புளியால் சதுரங்க கழக தலைவர் ஜோசப் இருதயராஜ், செயலாளர் ஜோசப் துவக்கி வைத்தனர். நடுவர்களாக தேசிய பயிற்சியாளர் சசிக்குமார் தலைமையில் பங்கேற்றனர். இதற்கான பரிசளிப்பு விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் நாகேந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் மிக்கேல்ராஜ் முன்னிலை வகித்தார். வயது 11 பிரிவில் முதலிடம் முப்பையூர் அரசு பள்ளி மாணவர் வர்ஷன், இரண்டாம் இடம் ராம்நகர் ஜோசப் பள்ளி சந்தோஷ், வயது 13 பிரிவில் முதலிடம் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளி மகாபாலா, இரண்டாம் இடம் சிங்கம்புணரி அரசு மகளிர் பள்ளி அனுநிதா, வயது 15 பிரிவில் முதலிடம் தேவகோட்டை நகரத்தார்பள்ளி மாணவர் நவீன், இரண்டாம் இடம் சிங்கம்புணரி அரசு மகளிர் பள்ளி அனுநிதா ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், சான்றுகள் வழங்கப்பட்டன.