உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அடிப்படை வசதியில்லா அரசு பஸ் டெப்போ கண்டக்டர், டிரைவர்கள் அவதி

அடிப்படை வசதியில்லா அரசு பஸ் டெப்போ கண்டக்டர், டிரைவர்கள் அவதி

திருப்புவனம் : திருப்புவனத்தில் செயல்பட்டு வரும் அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை காம்பவுண்ட் சுவர் கூட இன்றி பாதுகாப்பு இல்லாமல் செயல்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்டத்தின் கிளை பணிமனை திருப்புவனத்தில் கடந்த 1982ம் ஆண்டு தொடங்கப்பட்டது.ஆரம்பத்தில் ஒரு சில பஸ்களை வைத்து இயங்கிய நிலையில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப 44 டவுன் பஸ்கள் இயங்குகின்றன. கிளை பணிமனை இடப்பிரச்னை காரணமாக கடந்த 2015ம் ஆண்டு மடப்புரத்தில் சொந்த இடத்திற்கு மாற்றப்பட்டது. சொந்த இடம் என்பதால் பணிமனைக்கு தேவையான கட்டட வசதி ஏற்படுத்தி தரப்படும் என எதிர்பார்த்தனர். ஆனால் இன்று வரை காம்பவுண்ட் சுவர் கூட கட்டவில்லை. 4.55 ஏக்கர் பரப்பளவில் இடம் இருந்தும் 4 ஏக்கர் 55 சென்ட் பரப்பளவில் இருந்தும் டீசல் விநியோகம் செய்யும் இடத்தில் மேற்கூரை கூட இல்லை.சொந்த இடத்தில் ஒர்க் ஷாப், கேன்டீன், ஊழியர்கள் தங்க ஓய்வறை, அலுவலகம் பெயரளவில் மட்டுமே உள்ளது. ஆனால் இன்று வரை எந்த கூடுதல் வசதியும் ஏற்படுத்தவில்லை. கடந்த 15 ஆண்டாக பணிமனைக்கு புதிய பஸ்கள் கூட வாங்கவில்லை. மற்ற கோட்டங்களில் கழித்து கட்டும் பஸ்களை தான் இங்கு பயன்படுத்துகின்றனர்.அடிப்படை வசதிகளின்றி கிளை பணிமனை செயல்பட்டு வருவதால் போக்குவரத்து கழக ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ