உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்ணுடைய நாயகி ஜூலை 21ல் தங்க முளைப்பாரி ஏந்தி புறப்பாடு 

கண்ணுடைய நாயகி ஜூலை 21ல் தங்க முளைப்பாரி ஏந்தி புறப்பாடு 

சிவகங்கை, : நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் ஆடி முளைப்பாரி உற்ஸவ விழா தொடங்கியது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஜூலை 13 அன்று மாலை 6:30 மணிக்கு விதை பரப்புதல் நிகழ்வுடன் ஆடி முளைப்பாரி உற்ஸவ விழா தொடங்கியது. தினமும் அம்மன் சன்னதி முன் முளைப்பாரியை வைத்து, பெண்கள், சிறுமிகள் கும்மி பாட்டு பாடி வருகின்றனர். ஜூலை 20ம் தேதி மாலை 6:30 மணிக்கு முளைப்பாரிகளை பெயர்த்து வைத்தல் நிகழ்வும், ஜூலை 21 அன்று காலை 10:00 மணிக்கு அம்மன் தங்க முளைப்பாரியை தலைமையில் தாங்கி திருவீதி உலா நடைபெறும். ஜூலை 22 ல் மாலை 6:30 மணிக்கு தைலகாப்பு அலங்காரம், இரவு 7:00 மணிக்கு கண்ணுடைய நாயகி அம்மன் திருவீதி உலா வந்து, பக்தரகளுக்கு காட்சி அளிக்க உள்ளார். முளைப்பாரி விழாவை முன்னிட்டு தினமும் அம்மன் புறப்பாடும், முளைக்கொட்டுதல் நிகழ்வும் நடைபெறும். தேவஸ்தான நிர்வாகிகள் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி