உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சோழபுரம் உலகு சவுந்தரி அம்மன்  கோயிலில் மே 13ல் கும்பாபிேஷகம் 

சோழபுரம் உலகு சவுந்தரி அம்மன்  கோயிலில் மே 13ல் கும்பாபிேஷகம் 

சிவகங்கை : சிவகங்கை அருகே சோழபுரம் உலகு சவுந்தரி அம்மன் கோயில் கும்பாபிேஷகம் மே 13 அன்று நடைபெறுகிறது.சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சோழபுரம் உலகு சவுந்தரி அம்மன் கோயிலில், மே 12 அன்று மாலை 3:30 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷக பூஜை துவங்குகின்றன. அன்று மாலை 6:00 மணிக்கு கும்ப அலங்காரம், கடஸ்தாபனம், எந்திர பிரதிஷ்டை, மருந்து சாத்துதல் நடக்கும். இரவு 8:30 மணிக்கு முதற்கால பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெறும். மே 13 அன்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, நாடி சந்தானம், காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால மகா பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ரதானம், கடம் புறப்பாடு நடைபெறும். அன்று காலை 9:15 மணி முதல் 10:15 மணிக்குள் உலகு சவுந்தரி அம்மன் கோபுர கலசம், பரிவார தெய்வ கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைக்கின்றனர். தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோயில் கண்காணிப்பாளர் வேல்முருகன், கிராம மக்கள் சார்பில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை