உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பூட்டிய வீட்டை உடைத்து 12 பவுன் நகை, பணம் திருட்டு

பூட்டிய வீட்டை உடைத்து 12 பவுன் நகை, பணம் திருட்டு

காரைக்குடி, : காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி பத்மாவதி நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் 54. இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கோடவுனில் வேலை செய்து வருகிறார். இவர் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு சென்று விட்டு நேற்று காலை இலுப்பக்குடி வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகை ரூ. 43 ஆயிரம் மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் திருடு போயிருந்தது. அழகப்பாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை