உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் மாடு, குதிரை வண்டி பந்தயம்

காரைக்குடியில் மாடு, குதிரை வண்டி பந்தயம்

காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள தளக்காவூர்- மானகிரியில் பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடந்தது.சிவகங்கை புதுக்கோட்டை ராமநாதபுரம் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 53 ஜோடி மாடுகளும், 10 குதிரைகளும் பங்கேற்றன. பெரிய மாட்டில் 13 ஜோடிகளும், சிறிய மாட்டில் 40 ஜோடிகளும் பங்கேற்றன. பெரிய மாட்டிற்கு 7 மைல் துாரமும், சிறிய மாட்டிற்கு 5 மைல் துாரமும், குதிரைகளுக்கு 8 மைல் துாரமும் நிர்ணயிக்கப்பட்டது. வெற்றி பெற்ற குதிரைகள், மாடுகளுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்