உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அனுமத் ஜெயந்தி மஹோத்சவம் துவக்கம்

அனுமத் ஜெயந்தி மஹோத்சவம் துவக்கம்

காரைக்குடி : காரைக்குடி செக்காலை சந்தான கணபதி, சஞ்சீவி ஆஞ்சநேய பக்த சபா சார்பில் அனுமத் ஜெயந்தி மஹோத்ஸவம் நேற்று ஆஞ்சநேயர் ஆலயத்தில் துவங்கியது.ஜன. 12ம் தேதி வரை விழா நாட்களில் மாலை 5:30 மணிக்கு சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு ஸகஸ்ர நாம அர்ச்சனை, மாலை 6:30 மணிக்கு காரைக்குடி செக்காலை சங்கர மணி மண்டபத்தில் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடை பெறுகிறது.தினமும் சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு, வடை மாலை, ஸகஸ்ர நாம அர்ச்சனையில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ