உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிங்கம்புணரியில் கூட்டு பொங்கல் வழிபாடு

சிங்கம்புணரியில் கூட்டு பொங்கல் வழிபாடு

சிங்கம்புணரி ; சிங்கம்புணரி பகுதியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு உறவுகள் கூடி கூட்டுப்பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு படையல் போட்டு வழிபாடு செய்தனர். இங்கு விவசாயிகள் மாட்டுப்பொங்கல் தினத்தன்று பாரம்பரிய முறைப்படி மாடுகளுக்கு படையல் போட்டு வழிபாடு செய்வது வழக்கம். நேற்று சிங்கம்புணரி உள்ளிட்ட அனைத்து சுற்று வட்டார கிராமங்களிலும் மாட்டுப் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.விவசாயிகள் குழுவாக சேர்ந்து மாடுகளுக்கு பட்டி அமைத்தனர். மாடுகள் முன்பாக பெண்கள் வரிசையாக பொங்கல் வைத்தனர்.அனைத்து பானைகளில் இருந்தும் எடுக்கப்பட்ட பொங்கலை கொண்டு படையல் போடப்பட்டது. தேங்காய், இளநீர், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட பொருட்களும் படையலில் வைக்கப்பட்டு மாடுகளுக்கும் குலதெய்வத்துக்கும் பூஜை செய்தனர்.கிராம பெரியவர்கள் சாமியாடி அருள்வாக்கு கூறினர். பூஜை முடிந்ததும் படையல் பொருட்களை மாடுகளுக்கு வழங்கினர். மாடுகள் மஞ்சுவிரட்டு திடலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ