உள்ளூர் செய்திகள்

 கும்பாபிஷேகம்

எஸ்.புதுார்: எஸ்.புதூர் அருகே செட்டிகுறிச்சி பத்ரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நவ.26ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று காலை 10:00 மணிக்கு கோயில் விமானத்தில் புனித நீர் ஊற்றினர். அதனை தொடர்ந்து பத்ரகாளியம்மன், சின்னம்மாள், ஆட்கொண்டநாதர், ஆனைவிழிக்கருப்பர், சின்னக்கருப்பர், ஆண்டிச்சுவாமி போன்ற பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிேஷகம் நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை