உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சக்தி வீரமாகாளியம்மன் கோயிலில் அரிவாள் மீது ஏறி நின்ற சாமியாடி

சக்தி வீரமாகாளியம்மன் கோயிலில் அரிவாள் மீது ஏறி நின்ற சாமியாடி

காரைக்குடி : காரைக்குடி பர்மா காலனி சக்தி வீரமா காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா நடைபெறும். இவ்வாண்டு, திருவிழா கடந்த பிப். 13ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து முளைப்பாரியுடன் சக்தி வீரமா காளி பவனி வரும் காட்சியும், திருவீதி உலாவும் நடந்தது.நேற்று முன்தினம் இரவு, அரிவாள் ஏணியில் சாமியார் நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்தும் பறவைக்காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ