உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் பள்ளி கட்டடம் திறப்பு

திருப்புத்துாரில் பள்ளி கட்டடம் திறப்பு

திருப்புத்துார்: திருப்புத்துார் புதுப்பட்டியில் அரசு துவக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம், பயணியர் நிழற்குடையை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். *காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துாய்மை பணியாளர்களுக்கு ரூ.6 கோடியே 67 லட்சம் மதிப்பில் 270 இ -ரிக் ஷா வை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். நிகழ்ச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நடந்தது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அரவிந்த் முன்னிலை வகித்தார். உதவி இயக்குநர் ஊராட்சிகள் சோனாபாய், காளையார்கோவில் உதவி பொறியாளர்கள் ராஜா, ஜோசப், உமாராணி, உமா மகேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை