உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி அரசு பொறியியல் கல்லூரிக்கு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு

காரைக்குடி அரசு பொறியியல் கல்லூரிக்கு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு

சிவகங்கை : காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் கூடுதலாக 4 வகுப்பறை கட்டடம் கட்ட அரசு 30 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இக்கல்லூரியில் பல்வேறு பிரிவுகளில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவர்களின் வசதிக்கென போதிய வகுப்பறை இல்லை என கல்லூரி நிர்வாகம் சார்பில், அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஒதுக்கீடு:அரசு, கல்லூரியின் கோரிக்கையை ஏற்று இங்கு புதிதாக 4 வகுப்பறைகள் கட்ட, 30 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், மாணவர்களின் போக்குவரத்து வசதிக்கென, கல்லூரி வளர்ச்சி நிதி மற்றும் சிறப்பு கட்டண நிதியில் இருந்து 19 லட்ச ரூபாய் மதிப்பில் பஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை