உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காளையார்கோவில் ஒன்றியத்தில்ரூ.8.10 கோடிக்கு வளர்ச்சி பணிகள்

காளையார்கோவில் ஒன்றியத்தில்ரூ.8.10 கோடிக்கு வளர்ச்சி பணிகள்

காளையார்கோவில்:காளையார்கோவில் ஒன்றியத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.8.10 கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடந்திருப்பதாக ஒன்றிய தலைவர் சத்தியநாதன் தெரிவித்தார். ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றிய குழுத் தலைவர் சத்தியநாதன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எம்.பி.,எம்.எல்,ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ,ஒன்றிய பொது நிதி உட்பட பல்வேறு நிதிகளிலிருந்து ரூ.8கோடியே 10 லட்சத்து 93 ஆயிரத்திற்கு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளதாக தலைவர் தெரிவித்தார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரப்பன், ஜெகதாம்பாள் , மாவட்டகவுன்சிலர் கென்னடி, உதவி பொறியாளர்கள் முத்தழகு, பாலசுப்பிரமணியன், துணைவட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜஹாங்கீர், சேசு மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை