உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கம்பம்: மேகமலை பகுதியில் கனமழை பெய்து வருவதால், சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாவட்டம் முழுவதும் கோடை மழை பெய்து வருகிறது.தென்மேற்கு பருவ மழையும் பெய்ய துவங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.மேகமலை பகுதியில் ஹைவேவிஸ், மணலாறு , இரவங்கலாறு , மகாராஜா மெட்டு, தூவானம் உள்ளிட்ட பகுதிகளில் விடாமல் கனமழை பெய்து வருகிறது.இதனால் சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்று காலை முதல் முன்னெச்சரிககை நடவடிக்கையாக, அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.வனத் துறையின் தடையை தொடர்ந்து அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கவில்லை.அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள்ஆற்றின் கரையோரங்களில் குளித்து செல்கின்றனர்.அருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்தால் மட்டுமே, சுற்றுலாபயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர்தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை