உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / டவுன் பஞ்., கூட்டத்தில் கவுன்சிலர் வெளிநடப்பு

டவுன் பஞ்., கூட்டத்தில் கவுன்சிலர் வெளிநடப்பு

திருநெல்வேலி:சங்கர்நகர் டவுன் பஞ்., கூட்டத்தில் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி மதிமுக கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்.சங்கர்நகர் டவுன் பஞ்., கூட்டம் தலைவர் பேச்சிப்பாண்டியன் தலைமையில் நடந்தது. நிர்வாக அதிகாரி பாபு சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு கைதிகள் சாந்தன், பேரறிவாளன், முருகனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்யமத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மூன்றாம் வார்டு மதிமுக கவுன்சிலர் ராஜவடிவு வெளிநடப்பு செய்தார்.மூவருக்கும் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி டவுன் பஞ்., கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை