உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊரக வளர்ச்சி துறையில் 23 பேர் பணி நியமனம்

ஊரக வளர்ச்சி துறையில் 23 பேர் பணி நியமனம்

திருவள்ளூர்:ஊரக வளர்ச்சி துறையில், 23 பேருக்கு நேரடி உதவியாளர் பணி நியமனத்தை கலெக்டர் வழங்கினார்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- - 2-ல், மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் நேரடி உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 23 பேருக்கு, கலெக்டர் பிரபுசங்கர் பணி ஆணை வழங்கினார். நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிமாறன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி