உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாட்ஸாப் குழுவில் போதை மாத்திரை விற்பனை 5 பேர் கைது

வாட்ஸாப் குழுவில் போதை மாத்திரை விற்பனை 5 பேர் கைது

மாங்காடு:மாங்காடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், கல்லுாரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதில், ஈடுபடும் நபர்களை கைது செய்ய, மாங்காடு போலீசார், தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில், மாங்காடை அடுத்த கோவூர் பகுதியில் நேற்று, சந்தேகத்திற்கிடமாக நடமாடிய கோவூரை சேர்ந்த ஈனோக், 28, தாமோதரன் என்கிற அப்பு, 27, சிக்கராயபுரத்தை சேர்ந்த விஷ்ணு, 25, சரத்குமார், 25 ஆகியோரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அவர்களிடம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இவர்கள், ஸ்ரீபெரும்புதுார் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ், 32 என்பவரிடம் இருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வாங்கி வந்து, விற்பனை செய்து வந்ததும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க வாட்ஸாப் குழு அமைத்து, கல்லுாரி மாணவர்களை குறிவைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, ஒன்றரை கிலோ கஞ்சா, 75 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை