உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பழவேற்காடில் 10 பேர் மீது வழக்கு

மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பழவேற்காடில் 10 பேர் மீது வழக்கு

பழவேற்காடு:பழவேற்காடு கடல் பகுதியில், வெளிமாவட்டங்களில் இருந்து விசைப்படகுகளில் வரும் மீனவர்கள், தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்வதால், மீன்வளம் பாதிப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வந்தது.நேற்று முன்தினம், கடலுக்கு சென்ற பழவேற்காடு கூனங்குப்பம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், அங்கு கட்டுப்பாடுகளை மீறி, விசைப்படகுகளுடன் மீன்பிடித்த வெளிமாவட்ட மீனவர்களை கண்டனர்.விசைப்படகுகளில் இருந்த மீனவர்களிடம் கேட்டபோது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டது. இதில், பழவேற்காடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், இரண்டு பேர் பலத்த காயம் அடைந்தனர்.இதனால் பழவேற்காடு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்தனர். இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக திருப்பாலைவனம் போலீசார், புதுச்சேரி கீழக்கரையை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், 10 பேர் மீது வழக்கு பதிந்து உள்ளனர். மீன்வளத்துறை அதிகாரிகளின் உதவியுடன், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை