உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புதர் மண்டியுள்ள பூண்டி ஏரி ஓடைக்கால்வாய்

புதர் மண்டியுள்ள பூண்டி ஏரி ஓடைக்கால்வாய்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், அரிசந்திராபுரத்தில் துவங்க சின்னம்மாபேட்டை, பழையனூர் வழியாக பாயும் ஓடை நீர் மஞ்சாகுப்பம் அருகே கொசஸ்தலையாற்றில் கலந்து பின் பூண்டி நீர்த்தேக்கம் சென்றடைகிறது. இதன் நீளம் 14 கி.மீ., தூரமும், அகலம் 5 முதல் 60 மீட்டரும் உடையது.பூண்டி ஏரிக்கு மழைக்காலத்தில் ஓடை கால்வாய் வழியாக கிடைக்கும் நீரில் பழையனூர் ஓடை நீர் அதிகம்.இந்நிலையில் சின்னம்மாபேட்டை-- பழையனூர் வரையிலான ஓடை கால்வாயில் சுமார் 4 கி.மீ., தூரத்திற்கு கால்வாயை ஆக்கிரமித்து கோரைப்புல் முளைத்துள்ளது.கடந்தாண்டு பருவமழை பெய்த நிலையில், ஓடையில்நீர் பெருக்கெடுத்து ஓடியது. பருவமழை பெய்தாலே ஓடை கால்வாயில் ஆண்டு முழுதும் நீர் தேங்கி இருக்கும் ஆனால் தற்போது முழுதும் வறண்டு காணப்படுகிறது.இதற்கு ஓடையில்முளைத்துள்ள கோரைப்புல் செடிகளே காரணம் என விவசாயிகள் புலம்புகின்றனர்.மேலும் ஆடு, மாடு உள்ளிட்ட, 5000க்கும் மேற்பட்ட கால்நடைகள் இந்த பகுதியில் மேய்ச்சலுக்கு வந்து செல்கின்றன. இந்த கால்நடைகளுக்கு கோடைக்காலத்தில், நீர் பருக இந்த ஓடை நீர் பயன்படுகிறது.தற்போது விரைவில் நீர் வற்றி உள்ளதால், கால்நடைகள் நீர் இன்றி மிகுந்த சிரமத்தை அனுபவிக்கின்றன. எனவே நீர் இருப்பை பாதுகாக்க ஓடை கால்வாய் பகுதியில் முளைத்துள்ள செடிகளை அகற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை