| ADDED : மே 03, 2024 08:46 PM
கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. செவ்வாய், ஞாயிறு, விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகனை தரிசிக்க வருவர்.வேண்டுதல் நிறைவேற, பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோவில் உண்டியல்களில் பக்தர்களின் செலுத்துவது வழக்கம். பிப்ரவரி மாதம், 14ம் தேதி, உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதன்பின் நேற்று முன்தினம், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.கோவில் செயல் அலுவலர் மாதவன் முன்னிலையில், ஊழியர்கள், பக்தர்கள் கொண்ட குழுவினர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.இதில், 89 லட்சத்து 87,856 ரூபாய், 103 கிராம் தங்கம், 9 கிலோ 440 கிராம் வெள்ளி பொருட்கள் கணக்கிடப்பட்டு வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.