உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலில் 13ல் வைகாசி விசாக கொடியேற்றம்

திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலில் 13ல் வைகாசி விசாக கொடியேற்றம்

திருப்பாச்சூர்:திருப்பாச்சூர் தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வரசுவாமி கோவிலில் வரும் 13ம் தேதி வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் அமைந்துள்ளது தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வரசுவாமி கோவில். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருத்தணி முருகன் கோவிலின் உபகோயிலான இங்கு வைகாசி விசாக பெருவிழா வரும் 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று மாலை சுவாமி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும்.முன்னதாக 9ம் தேதி காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் பந்தக்கால் நிகழ்ச்சியும், 11ம் தேதி காலை கிராம தேவதையான பாசூரம்மன் வழிபாடும், மாலையில் பாசூரம்மன் வீதியுலாவும் நடைபெறும். 12ம் தேதி காலை சொர்ணகாளி அம்மன் உற்சவமும், மாலை விநாயகர் உற்சவமும் நடைபெறும்.தினமும் காலை 7:00மணிக்கும் மாலை 6:00 மணிக்கு சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 25ம் தேதி காலை கொடியிறக்கத்துடன் வைகாசி திருவிழா நிறைவு பெறும் என ஹிந்து சமய நிலைய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை