| ADDED : மே 10, 2024 09:14 PM
சென்னை:தி புளூ ஸ்கை ஸ்போர்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில், மூன்று விக்கெட் வித்தியாசத்தில், யங் சி.சி., அணி வெற்றி பெற்றது.சென்னையில், தி ப்ளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில், புளூ ஸ்கை ஸ்போர்ட்ஸ் லீக் போட்டிகள் நடக்கின்றன. இவற்றில், ஒன்பது அணிகள் பங்கேற்று, தலா ஒவ்வொரு அணிகளும் எட்டு போட்டிகள் வீதம் 'லீக்' முறையில் மோதி வருகின்றன.நேற்று முன்தினம், எம்.சி.சி., பள்ளியில் நடந்த லீக் போட்டியில், யங் சி.சி., மற்றும் ஜி.எல்.சி.சி., அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜி.எல்.சி.சி., முதலில் பேட் செய்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், ஒன்பது விக்கெட்டுகளை இழந்து, 148 ரன்களை அடித்தது.அடுத்து களமிறங்கிய யங் சி.சி., அணி, துவக்கத்தில் இருந்தே ரன்களை குவித்து, 17.5 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு, 149 ரன்களை அடித்து, மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.