உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாலை, டி.என்.21 என்.1492 பேருந்து மாணவர்கள், பயணியரை ஏற்றிக் கொண்டு பெரியபாளையம் வழியே ஏனம்பாக்கம் சென்றது. பேருந்து நிலையம் வெளியே வரும் போது, திடீரென பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைக்கப்பட்ட சத்தம் கேட்டு மாணவர்கள், பயணியர் அலறினர். பேருந்தில் இருந்த மாணவர்கள் சிலர் தான் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை