உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கனகம்மாசத்திரம் --- திருவள்ளூர் புதிய பேருந்து இயக்கம்

கனகம்மாசத்திரம் --- திருவள்ளூர் புதிய பேருந்து இயக்கம்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் ஊராட்சியில், 15,000த்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பி.டி.ஓ., அலுவலகம், வேளாண் அலுவலகம், வட்டார கல்வி அலுவலகத்திற்கு திருவாலங்காடுக்கு செல்ல வேண்டி உள்ளது. இந்நிலையில் திருவாலங்காடுக்கு செல்ல போக்குவரத்து வசதியின்றி சிரமம் அடைந்து வந்தனர்.எனவே கனகம்மாசத்திரம் - திருவள்ளூருக்கு திருவாலங்காடு வழியாக பேருந்து இயக்க வேண்டும் என, 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.இதையடுத்து திருவள்ளூர் மண்டல போக்குவரத்து அதிகாரி இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கனகம்மாசத்திரம்- -- திருவள்ளூருக்கு பேருந்து இயக்க விழா நேற்று நடந்தது.இதை திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் துவக்கி வைத்தார். இந்த விழாவில் திருவள்ளூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் நெடுஞ்செழியன், திருவாலங்காடு தி.மு.க., ஒன்றிய செயலர் ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.இந்த பேருந்து காலை, மாலை என இருவேளைகளில் இயக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை