உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிரம்பி வழியும் பாதாள சாக்கடை நோய் அபாயத்தில் திருமழிசை மக்கள்

நிரம்பி வழியும் பாதாள சாக்கடை நோய் அபாயத்தில் திருமழிசை மக்கள்

திருமழிசை: திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் நிரம்பி வழியும் பாதாள சாக்கடை கழிவுநீர் மழைநீருடன் கலந்து ஆறு போல் வழிந்தோடுவது பகுதி மக்களிடையே நோய் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமழிசை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 130க்கும் மேற்பட்ட தெருக்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, பாதாள சாக்கடை திட்டப் பணிகள், 40.60 கோடி ரூபாய் செலவில், கடந்த 2007ல் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தால் துவக்கப்பட்டு 2019ம் ஆண்டு நிறைவடைந்தது. ஆனால் பாதாள சாக்கடை பல பகுதியில் அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் 'மேன்ஹோல்' பகுதி வழியாக கழிவுநீர் வழிந் தோடுகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் பகுதிமக்கள் கடும் சிரமப்பட்டு வருவதோடு தொற்று நோய் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக பேரூராட்சி அலுவலகம் செல்லும் சாலை மற்றும் அலுவலகம் நுழைவாயில் பகுதியிலேயே பாதாள சாக்கடை மேன்ஹோல் பகுதி வழியாக கழிவுநீர் வெளியேறி வருவது பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் திருமழிசை பேரூராட்சியில் ஆய்வு செய்து, நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை