உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / துாத்துக்குடி மீனவர்கள் இலங்கை படையால் கைது

துாத்துக்குடி மீனவர்கள் இலங்கை படையால் கைது

துாத்துக்குடி:சர்வதேச எல்லையை தாண்டி இலங்கை கடல் எல்லைப் பகுதிக்குள் நுழைந்து மீன் பிடித்ததாக, துாத்துக்குடி மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். துாத்துக்குடி அருகேயுள்ள தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு சொந்தமான விசைப்படகுகளில் 22 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இலங்கை மன்னார் நெடுந்தீவு அருகே அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் , தமிழக மீனவர்களை நேற்று கைது செய்தனர்.அவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை