உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முகாம்களில் 191 யூனிட் ரத்தம் சேகரிப்பு

முகாம்களில் 191 யூனிட் ரத்தம் சேகரிப்பு

அனுப்பர்பாளையம்:திருப்பூர், முயற்சி மக்கள் அமைப்பு சார்பில், தெற்கு ரோட்டரி சங்கத்துடன் இணைந்து நடத்திய ரத்ததான முகாமுக்கு, ரோட்டரி சங்க தலைவர் மோகனசுந்தரம், தலைமை வகித்தார். செயலாளர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராம்குமார், வரவேற்றார்.ரோட்டரி முன்னாள் கவர்னர் நாராயணசாமி, துவங்கி வைத்தார். மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் சாமிநாதன், முயற்சி மக்கள் அமைப்பின் தலைவர் சிதம்பரம் வாழ்த்துரை வழங்கினர். 102 யூனிட் ரத்தம் சேகரித்தனர். ரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் விபத்து காப்பீடு பாலிசியை, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சக்திவேல் உள்ளிட்டோர் வழங்கினர்.l சென்ட்ரல் லயன்ஸ் கிளப் அறக்கட்டளையுடன் இணைந்து காந்தி நகரில் நடந்த முகாமுக்கு, அதன் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் ராமச்சந்திரன், அருண்பிரபு முன்னிலை வகித்தனர். பொருளாளர் தாசன் வரவேற்றார். முன்னாள் தலைவர் அனந்தநாராயணன் துவக்கி வைத்தார். 89 யூனிட் ரத்தம் சேகரிக் கப்பட்டது. ரத்த கொடையாளர்களுக்கு லயன்ஸ் கிளப் டிரஸ்ட் சேர்மன் துரைசாமி உள்ளிட்டோர் சான்றிதழ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ