உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில பேச்சுப்போட்டி 9 மாணவர்கள் தேர்வு

மாநில பேச்சுப்போட்டி 9 மாணவர்கள் தேர்வு

-- நமது நிருபர் -திருப்பூரில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில், மாநில போட்டிக்கு 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.நாடார் மகாஜன சங்கம் சார்பில், காமராஜர் பிறந்தநாள், கல்வித்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான பேச்சுப்போட்டி, வரும் 15ம் தேதி விருதுநகரில் நடக்கிறது. இதையொட்டி, மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, திருப்பூரில், பி.என்., ரோட்டில் உள்ள முருகு மெட்ரிக் பள்ளியில் நடந்தது.எஸ்.வி.என்., கல்லுாரி துணை தலைவரும், நாடார் மகாஜன சங்க பிரதிநிதியுமான பொன்னுசாமி தலைமைவகித்தார். இப்போட்டியில், அரசு, மெட்ரிக் பள்ளி மாணவ மாணவியர், 205 பேர் போட்டியில் பங்கேற்றனர். மாநில போட்டிக்கு 9 பேர் தேர்வாயினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை