உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருட்டு வழக்கு; 3 ஆண்டு சிறை

திருட்டு வழக்கு; 3 ஆண்டு சிறை

திருப்பூர் : ஆண்டிபாளையம், அண்ணாமலையார் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 55. கடந்த மே 17ம் தேதி இவரது வீட்டு பூட்டு உடைத்து நாகப்பட்டினத்தை சேர்ந்த சட்டநாதன், 40 என்பவர் பொருட்களை திருடினார். சென்ட்ரல் போலீசார் அவரை கைது செய்தனர். வழக்கு விசாரணை திருப்பூர் ஜே.எம்.எண் -2 கோர்ட்டில் நடந்தது. குற்றவாளிக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் பழனிகுமார் தீர்ப்பளித்தார். விசாரணை மேற்கொண்ட போலீசாரை, கமிஷனர் லட்சுமி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !