உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூடைப்பந்து: லிட்டில் பிளவர், விவேகானந்தா அபாரம்

கூடைப்பந்து: லிட்டில் பிளவர், விவேகானந்தா அபாரம்

திருப்பூர்;திருப்பூர் தெற்கு குறுமைய கூடைப்பந்து போட்டி, பிரன்ட்லைன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் சிவசாமி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் துவக்கிவைத்தனர். 14, 17, 19 வயது பிரிவினருக்கு 'நாக்-அவுட்' முறையில் போட்டிகள் நடந்தன; மொத்தம், 20 அணிகள் பங்கேற்றன.பதினான்கு வயது பிரிவினர் இறுதி போட்டியில் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியர் 12-2 என்ற புள்ளிக்கணக்கில், விகாஸ் வித்யாலயா பள்ளி அணியை வென்றனர். பதினேழு வயது மாணவியர் பிரிவு போட்டியில் கடைசி வரை போராடிய, பிரன்ட்லைன் பள்ளி அணி, விவேகானந்தா வித்யாலயா பள்ளி அணியிடம், 8 - 12 என்ற புள்ளிக்கணக்கில் தோற்றது. பத்தொன்பது வயது மாணவியர் போட்டியில் அதிரடி புள்ளிகளை குவித்த செஞ்சுரி பவுண்டேசன் பள்ளி அணி, 23 - 10 என்ற புள்ளிக்கணக்கில், பிரன்ட்லைன் பள்ளி அணியை வென்றது.பதினான்கு வயது பிரிவு மாணவருக்கான போட்டியில், லிட்டில் பிளவர் பள்ளி பிரன்ட்லைன் பள்ளி அணியை 29 - 19 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.மாணவர், 17 வயது பிரிவில், லிட்டில் பிளவர் பள்ளி அணி 21-6 என்ற புள்ளிக்கணக்கில் செஞ்சுரி பவுண்டேசன் பள்ளியை வென்றது.மாணவர் பிரிவு மூன்று ஆட்டங்களில் மூன்றையும் லிட்டில் பிளவர் பள்ளி அணி கைப்பற்றி, அசத்தியது. மாணவியர் பிரிவில் மூன்று ஆட்டங்களில் இரண்டு ஆட்டங்களை விவேகானந்தா பள்ளி கைப்பற்றியது.---2 அல்லது 3 காலம்திருப்பூர் தெற்கு குறுமைய கூடைப்பந்து போட்டி, பிரன்ட்லைன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில் சென்சுரி பவுண்டேசன் மற்றும் பிரன்ட்லைன் பள்ளிகள் மோதின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை