உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாத்திரம் தயாரிக்க மின் மானியம் பி.எம்.எஸ்., வலியுறுத்தல்

பாத்திரம் தயாரிக்க மின் மானியம் பி.எம்.எஸ்., வலியுறுத்தல்

அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாவட்ட பாரதிய மஸ்துார் சங்க (பி.எம்.எஸ்.,) பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஆத்துப்பாளையம் காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் பிரபு, செயல் தலைவர் செந்தில், மாவட்ட செயலாளர் மாதவன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.கூட்டத்தில், பாத்திர தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். பாத்திர தொழிலாளர்களுக்கு கண் கண்ணாடி, மாஸ்க், கையுறை, போன்ற பாதுகாப்பு ஊரணங்களை மாநில அரசு வழங்கிட வேண்டும். மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். வரும், 23ம் தேதி சங்கத்தின், 70 ஆண்டு விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 23 இடங்களில் கொடியேற்று விழா நடத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக அனுப்பர்பாளையம் கிளை தலைவராக குமரவேல், பொதுச் செயலாளராக பாலசுப்பிரமணியம், துணை தலைவர்களாக பாலாஜி, கோபால், மூர்த்தி, செயலாளராக மணிகண்டன், துணைச் செயலாளராக துரைராஜ், பொருளாளராக பாஸ்கர், ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி