உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓய்வு பெறும் நாளில் பொறியாளர் சஸ்பெண்ட்

ஓய்வு பெறும் நாளில் பொறியாளர் சஸ்பெண்ட்

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி மாநகர பொறியாளர் லட்சுமணன், ஓய்வு பெறும் நாளில், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.திருப்பூர் மாநகராட்சியில் மாநகர பொறியாளராக கடந்த சில மாதங்களாக லட்சுமணன் பணியாற்றி வந்தார். நேற்று 30ம் தேதியுடன் அவர் ஓய்வு பெறவிருந்த நிலையில், அவருக்கு அதற்கான உத்தரவு வழங்கப்படவில்லை.அவர், இதற்கு முன் கோவை மாநகராட்சியில் பணியாற்றிய போது, கட்டட அனுமதி வழங்கியது தொடர்பாக கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கு விசாரணை வரும் ஜூன் மாதம் நடைபெறுகிறது.எனவே, நேற்று மாலை ஓய்வு பெறும் நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை, நகராட்சி நிர்வாக துறை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ