உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  திருப்பூருக்கு கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்

 திருப்பூருக்கு கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்

உடுமலை;உடுமலை கிளை போக்குவரத்து கழகத்தின் சார்பில், கிராமம் மற்றும் தொலைதுார வழித்தடங்களில், நுாற்றுக்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருப்பூர் மற்றும் கோவை உட்பட தொழில் நகரங்களுக்கும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர்.இதில், கோவை செல்வதற்கு, பழநி மற்றும் உடுமலையிலிருந்து நள்ளிரவு மற்றும் அதிகாலையிலும் பஸ்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தேவையான எண்ணிக்கையில் இயக்கப்படுகிறது. ஆனால் உடுமலை - திருப்பூர் இடையிலான பஸ் போக்குவரத்து இரவு, 10:25 மணி வரை மட்டுமே இருப்பதால், பயணியர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.உடுமலை - திருப்பூர் செல்லும் வழிதடத்தில், பல்லடம் மற்றும் குடிமங்கலம், கோட்டமங்கலம், உட்பட பல்வேறு கிராமப்புற மக்களுக்கும், இத்தொலைதுார பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.உடுமலையிருந்து, திருப்பூருக்கு இரவு 10:20 மணிக்கும், திருப்பூரிலிருந்து உடுமலைக்கு இரவு 10:25 மணிக்கு இறுதி பஸ்சும் இயக்கப்படுகிறது.இந்த பஸ்சை தவறவிடும் பயணிகள், திருப்பூரிலிருந்து வால்பாறைக்கு 11:00 மணி பஸ்சில் பொள்ளாச்சி சென்று பின், அங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்சில் உடுமலை வந்தடைகின்றனர். இத்தகைய சிரமத்தை தவிர்க்கவும் கிராமப்புற மக்கள் மற்றும் திருப்பூர் செல்லும் பயணியர் பயன்பெறும் வகையில் இரவில், திருப்பூருக்கு பஸ் இயக்கப்படும் நேரத்தை கூடுதலாக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை