உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீதிபதிகள் பதவி உயர்வு :திருப்பூரில் 2 பேர் தேர்வு

நீதிபதிகள் பதவி உயர்வு :திருப்பூரில் 2 பேர் தேர்வு

உடுமலை;தமிழகம் முழுவதும் சீனியர் நீதிபதிகள் 17 பேர் மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதில் திருப்பூர் மாவட்டத்தில் இருவர் இடம் பெற்றுள்ளனர்.பொதுத்துறை (தனி 'ஏ' பிரிவு) அரசு செயலர் நந்தகுமார் பிறப்பித்த உத்தரவில், தமிழகம் முழுவதும் நீதித்துறையில் பணியாற்றும் மூத்த நீதிபதிகள், 17 பேர் மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.காலியாக உள்ள பணியிடங்களில் அவர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். சென்னை ஐகோர்ட் பதிவாளர் பரிந்துரைகளை ஏற்று இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் முதன்மை குற்றவியல் நடுவராகப் பணியாற்றும் புகழேந்தி, அவிநாசி சார்பு நீதிபதி சுரேஷ்குமார் ஆகிய இருவர் மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை