உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் பாரத் மெட்ரிக் பள்ளி சபாஷ்

பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் பாரத் மெட்ரிக் பள்ளி சபாஷ்

திருப்பூர் : திருப்பூர், வீரபாண்டியில் உள்ள பாரத் மெட்ரிக்., பள்ளி, நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றது. இப்பள்ளி மாணவி பூர்விகா, 500க்கு, 491 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பெற்றார். மாணவ தருணிகா, 482; நித்யாஸ்ரீ, 480 மதிப்பெண் பெற்று, இரண்டு மற்றும் மூன்றாமிடம் பெற்றனர். கணக்கு பாடத்தில், 8 பேர், 100 மதிப்பெண் பெற்றனர். 95 மதிப்பெண்ணுக்கு மேல், 16 பேர் பெற்றனர். தேர்வெழுதிய மாணவர்களில், 40 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள், 450 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றனர்.தற்போது எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி வழங்கிய ஆசிரியர்கள், துணை நின்ற பெற்றோருக்கு, பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி