உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் :நெரிசலால் தவிக்கும் மக்கள்

ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் :நெரிசலால் தவிக்கும் மக்கள்

உடுமலை:உடுமலை நகரம் வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. நகரில், பொள்ளாச்சி ரோடு, ராஜேந்திரா ரோடு, பழநி ரோடு, தளி ரோடு, கல்பனா ரோடு, திருப்பூர் ரோடு போன்றவை பிரதான ரோடுகளாக உள்ளன.இந்த ரோடுகளில் எப்போதும் போக்குவரத்து அதிகரித்து காணப்படும். இவற்றின் ஓரங்களில் கடைகளின் ஆக்கிரமிப்பு, வாகனங்களின் நிறுத்தம் போன்ற பிரச்னைகள் நிரந்தரமாக இருந்து வருகின்றன.இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு, வாகன ஓட்டுநர்களும் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்களும் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.எனவே, பிரதான ரோடுகளில் வாகனங்களின் ஆக்கிரமிப்புகள், கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசாரும், நகராட்சி அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் வாயிலாக, போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை