விஷம் குடித்து மெக்கானிக் பலி
திருப்பூர், தோட்டத்துபாளையம் சிட்டி கார்டனைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 36. மெக்கானிக். இவரது மனைவி சில மாதங்கள் முன் இவரை விட்டு பிரிந்து சென்றதால், மனமுடைந்து, நாச்சிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே சம்பத்குமார் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். அவரை மீட்டு அவரது தந்தை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இறந்தார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். வலி நிவாரணி மாத்திரை பறிமுதல்
வலி நிவாரணி மாத்திரையை போதைக்கு பயன்படுத்த டெல்லியில் இருந்து திருப்பூருக்கு கூரியர் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக, இன்ஸ்பெக்டர் உதயகுமார் உள்ளிட்ட போலீசார் கண்காணித்தனர். காலேஜ் ரோட்டில் உள்ள கூரியர் நிறுவனத்துக்கு பார்சல் வாங்க வந்த ஆண்டிபட்டியை சேர்ந்த சற்குணபாண்டியன், 25 என்பவரை கைது செய்தனர். பார்சலில் இருந்த, 200 வலி நிவாரணி மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது. இளம்பெண் தற்கொலை
காங்கயம், சுபாஷ் நகரை சேர்ந்தவர் மேகராஜ், 25. இவரது மனைவி சினேகா, 21. கடந்த, 2021ம் ஆண்டு திருமணம் நடந்தது. குழந்தையின்மை காரணமாக மருத்துவமனையில் தம்பதி சிகிச்சை பெற்று வந்தனர். அவ்வப்போது, தம்பதிக்கு இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வேலையில், மனைவியை மேகராஜ் சத்தம் போட்டார். பின் வெளியில் சென்று விட்டு திரும்பிய போது, மனைவி சினேகா வீட்டில் துாக்குமாட்டி இறந்து கிடந்தார். காங்கயம் போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.