உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சனிப் பிரதோஷ வழிபாடு; பக்தர்கள் பரவசம்

சனிப் பிரதோஷ வழிபாடு; பக்தர்கள் பரவசம்

திருப்பூர்;திருப்பூர் பகுதி சிவாலயங்களில் நேற்று சனிப்பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.நேற்று ஆவணி மாதப் பிறப்பு மற்றும் வளர்பிறை சனிப்பிரதோஷத்துடன் அமைந்திருந்தது. இதையொட்டி திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள சிவாலயங்களில் நேற்று சனி மகா பிரதோஷ சிறப்பு மற்றும் வழிபாடு நடைபெற்றது.திருப்பூர், ஸ்ரீ விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர் கோவிலில் அதிகார நந்திக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடைபெற்றது. தொடர்ந்து விஸ்வேஸ்வரருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை ஆகியன நடந்தது.வெள்ளி ரிஷப வாகனம் மீது உமா மகேஸ்வரர் தம்பதி சமேதராக எழுந்தருளினர். கோவில் பிரகாரத்தில் உற்சவர் திருவீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.l அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில், அலகுமலை ஆதிகைலாசநாதர் கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில், டி.பி.ஏ., காலனி காசி விஸ்வநாதர் கோவில், லட்சுமி நகர் அருணாசலேஸ்வரர் கோவில்; வாவிபாளையம் சுப்ரமணியர் கோவில் - காசி விஸ்வநாதர் சன்னதி, திருநீலகண்டபுரம் திருநீலகண்ேடஸ்வரர் கோவில், சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் - காசி விஸ்வநாதர் சன்னதி, பல்லடம் சித்தம்பலம் நவக்கிரக கோட்டை சிவன் கோவில் உள்ளிட்ட திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் நேற்று சனி மகாப் பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.இவற்றில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.அனைத்து கோவில்களிலும் நந்தியம் பெரு மானுக்கு சிறப்பு அபி ேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடத்தி பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ