உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீரன் சின்னமலை நினைவு நாள்; திருப்பூர் மாவட்டத்துக்கு விடுமுறை

தீரன் சின்னமலை நினைவு நாள்; திருப்பூர் மாவட்டத்துக்கு விடுமுறை

உடுமலை : தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்துக்கு, ஆக., 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுகலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, பழைய கோட்டையில், மேலப்பாளையம் சிற்றுாரில் பிறந்து, ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவர் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை. அவரது நினைவு நாளை முன்னிட்டு, வரும் ஆக., 3ம் தேதி (ஆடி 18ம் தேதி) சனிக்கிழமை, மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை, வங்கிகளுக்கு பொருந்தாது.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்