உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் ஸ்டாண்ட் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பஸ் ஸ்டாண்ட் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

உடுமலை;உடுமலை அருகே கொமரலிங்கத்தில், பஸ் ஸ்டாண்ட் அமைக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை - பழநிக்கு மடத்துக்குளம், கொழுமம் வழியாக இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இதில், கொழுமம் தடத்தில் கொமரலிங்கம் பல்வேறு கிராமங்களில் முக்கிய சந்திப்பாக உள்ளது. ஆனால், இங்கு பஸ் ஸ்டாண்ட் இல்லாமல், பஸ் நிறுத்தம் மட்டுமே உள்ளது. இதனால், அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, கொமரலிங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ