உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்புதல் தேர்வு; வரும் 5ல் துவக்கம்  

திருப்புதல் தேர்வு; வரும் 5ல் துவக்கம்  

உடுமலை:உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வரும் 5ம் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள், பெருமளவு முழுமை பெற்றுள்ளன. மாணவர்களை, பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், பள்ளி அளவில் அலகுத் தேர்வும் நடத்தி பயிற்சி அளிக்கப்படுகிறது.இந்நிலையில், மாணவ, மாணவியரை முழுமையாக பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், நடப்பாண்டிற்கான திருப்புதல் தேர்வு, வரும், 5ல் துவங்குகிறது.அதன்படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 திருப்புதல் தேர்வு வரும், 5 முதல் 12ம் தேதி வரையும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு, வரும் 8 முதல் 12ம் தேதி வரையும் நடத்தப்படுகிறது.இந்த தேர்வு, பொதுத்தேர்வின் மாதிரி வடிவில் நடத்தப்படுகிறது. இதற்காக, மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படவும் உள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'திருப்புதல் தேர்வு, மதியம், 1:30 மணிக்கு துவங்கி, மாலை, 4:45 மணி வரை நடத்தப்படும். தேர்வு இல்லாத வேளைகளில், மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுக்கு வகுப்புகள் நடத்தப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை