உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இளம் விஞ்ஞானிகள் முகாம் :மாணவருக்கு பாராட்டு

இளம் விஞ்ஞானிகள் முகாம் :மாணவருக்கு பாராட்டு

உடுமலை:இளம் விஞ்ஞானிகள் முகாம் போட்டியில், வெற்றி பெற்ற மலையாண்டிபட்டினம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.உடுமலை ஜி.வி.ஜி., கல்லுாரியில், மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான, இளம் விஞ்ஞானிகள் முகாம் நடந்தது.முகாமில், மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியிலிருந்து, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், கிருத்திகா பங்கேற்றனர்.முகாமில் நடந்த அறிவியல் கண்காட்சி போட்டியில், இப்பள்ளி மாணவர் சஞ்சய் முதல் பரிசு பெற்றார்.வெற்றி பெற்ற மாணவருக்கு, பள்ளி மேலாண்மை குழுவினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை