மேலும் செய்திகள்
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
போதை மாத்திரை வழக்கில் 4 பேர் சிக்கினர்
02-Oct-2025
மெக்கானிக் உடல் அழுகிய நிலையில் வீட்டில் மீட்பு
01-Oct-2025
வேலுார்:வேலுார் மாவட்டம், சின்ன அல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இங்கு, 11 ஆண்டாக தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் செந்தில்குமார். இவர், பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தும், சொந்த செலவில் மாற்று ஏற்பாடு செய்து, 80 பேர் படித்த பள்ளியில், 400 மாணவ - மாணவியர் படிக்கும் அளவிற்கு பள்ளியை உயர்த்தினார்.அப்பகுதி மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர்களுக்கு சிறந்த ஆசிரியராக அறியப்பட்டார். தற்போது, அவர் சதுப்பேரி துவக்கப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதிர்ச்சியடைந்த மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர், இதை கண்டித்து பள்ளி முன் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வித்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி, சின்ன அல்லாபுரம் பள்ளியையும் கூடுதலாக கவனித்து கொள்வார் என உறுதி அளித்தனர். இதையடுத்து, மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர் போராட்டத்தை கைவிட்டனர்.
02-Oct-2025
02-Oct-2025
01-Oct-2025