மேலும் செய்திகள்
பென்லேண்ட் மருத்துவமனையில் மருந்து வழங்க ஊழியரின்றி அவதி
22 hour(s) ago
பெண் பயணியை காப்பாற்றி காயமடைந்த காவலர்
03-Oct-2025
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
வேலுார்:தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பழகனின் மருமகள், 80 சதவீத தீக்காயத்துடன், வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பழகன். இவரது மகன் சசிமோகன், 32, மருத்துவ கல்லுாரியில் படித்த போது, உடன் படித்த பூர்ணிமா, 30, என்பவரை காதலித்து, நான்கு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த, 17ம் தேதி வீட்டில் மருமகள் பூர்ணிமா, விளக்கு பற்ற வைத்தபோது அவர் அணிந்திருந்த உடையில் தீப்பிடித்ததில், 80 சதவீதம் காயமடைந்து, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின், வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
22 hour(s) ago
03-Oct-2025
02-Oct-2025