உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / காட்டாமணக்கு சாப்பிட்ட மாணவர்கள் சுகவீனம்

காட்டாமணக்கு சாப்பிட்ட மாணவர்கள் சுகவீனம்

வேலுார்:வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த குண்டலப்பள்ளி கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியர், நேற்று மதியம், பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில், காட்டாமணக்கு செடியில் உள்ள காயை பறித்து சாப்பிட்டு சென்றனர்.அவர்களில், 8 - 11 வயதுடைய ஒன்பது மாணவ - மாணவியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள், பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின், தற்போது அனைவரும் நலமுடன் உள்ளனர். பேரணாம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ