உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / எலி மருந்து சாப்பிட்ட சோடா வியாபாரி சாவு

எலி மருந்து சாப்பிட்ட சோடா வியாபாரி சாவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே உடல் வலியால் எலி மருந்து சாப்பிட்ட வியாபாரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 52; சோடா வியாபாரி. இவர், சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தில் இடுப்பு எலும்பு உடைந்ததில் அறுவை சிகிச்சையில் இடுப்பில் பிளேட் வைத்தனர். இதனால் அடிக்கடி இடுப்பு வலியால் அவதியடைந்தார்.இதனால் மனமுடைந்த அவர் கடந்த 10ம் தேதி எலிபேஸ்ட் சாப்பிட்டார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று இறந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்