உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பழுதான குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்படுமா?

பழுதான குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்படுமா?

விழுப்புரம் : விழுப்புரம் தேவநாதசாமி நகரில் இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோட்டில், சாலை அகரம் ஊராட்சிக்குட்பட்ட தேவநாத சாமி நகரில், 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த 1999ம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் குடிநீர் தொட்டியை தாங்கி நிற்கும் பில்லர்களின் கீழ் பகுதியில், காரைகள் பெயர்ந்து விழுந்து, கான்கிரீட் கம்பிகள் தெரிகிறது. இதனால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.குடிநீர் தொட்டி அருகே பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளதால், அங்கு தினசரி பக்தர்கள், பொது மக்கள் அதிகம் கூடும் பகுதியாக உள்ளது. மேலும், சாலையின் ஓரத்தில் குடிநீர் தொட்டி இருப்பதால், இடிந்து விழுந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்படும்.எனவே, குடிநீர் தொட்டியை அதிகாரிகள் ஆய்வு செய்து, இடித்து அகற்றி விட்டு, புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி